லாரிகள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி


லாரிகள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி
x

லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. அப்போது அந்த லாரியும் எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஆந்திர மாநில லாரியில் வந்த 2 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story