பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
x

சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளினார். அப்போது தாலாட்டு பாடி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story