வாழைத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்


வாழைத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

வாழைத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கரூர்

லாலாபேட்டை சிவன் கோவில் பின்புறம் உள்ள வாழைத்தோட்டத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிந்தலவாடி கிராம நிர்வாக அலுவலர் பிரபு லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story