அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு


அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
x

ஊட்டியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் ரவுண்டானா அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக ஊட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது வடமாநிலத்தை சேர்ந்தவர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மது அதிகமாக குடித்து இறந்தாரா அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.



Next Story