அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்


அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்
x

அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டிடத்தின் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தத. இதுகுறித்து அவர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story