உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்


உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்

உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விநாயகர் சதுர்த்தி விழா

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக 17-ந் தேதி விநாயகர் சித்தி, புத்தி திருக்கல்யாணம், 18-ந் தேதி தேரோட்டம், 19-ந் தேதி உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் காலை விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காலை 9 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி விநாயகர் வெள்ளி ரதத்தில் உப்பூர் கடற்கரைக்கு எழுந்தருளினார். பின்னர் கடலில் தீர்த்தம் ஆடி தீர்த்தவாரி நடந்து பக்தர்கள் வெள்ளத்தில் விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிறப்பு அபிஷேகம்

தொடர்ந்து பகல் 12 மணிக்கு ராமநாதபுரம் தேவஸ்தானம் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாகநாதன் சேதுபதி, தேவகோட்டை ஜமீன்தார் நாராயண செட்டியார், தேவகோட்டை குமார் என்ற அருணாசலம், ஏ.ஆர்.நாராயணன் செட்டியார் முன்னிலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு வெட்டுக்குளம் வாசுதேவன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் 7 மணிக்கு விநாயகர் வெள்ளி கோரதம் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 10 மணிக்கு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், கடலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் குஞ்சரம் கிருஷ்ணன், வெட்டுக்குளம் வாசுதேவன், உப்பூர் குமரய்யா அம்பலம், செந்தில்குமார், முத்துக்குமார், ரவிக்குமார், உப்பூர் எம்.எஸ். உணவகம் உரிமையாளர் கணேசன், அடர்ந்தனார் கோட்டை அரிராம், சாந்தி டிரேடர்ஸ் உரிமையாளர் செல்லத்துரை, நாகனேந்தல் விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் தனமதிவாணன், முருகானந்தம் டிரேடர்ஸ் உரிமையாளர் முருகானந்தம், கடலூர் ஊராட்சி தலைவர் முருகவள்ளி பாலன், துணை தலைவர் சேவியர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பாண்டித்துரை, தமிழரசி, வைரம்பாள், மஞ்சுளா, கலைஞர் ராணி, ராஜேஸ்வரி, இளங்கோவன், அழகப்பன், ஊராட்சி செயலர் அந்தோணி சாமி, ஆர்.எஸ்.மங்கலம் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் திவாகரன், காவனூர் ஊராட்சி தலைவர் கவுதமி திவாகரன், எல்.ஐ.சி. முகவர்கள் கந்தசாமி, ரவீந்திரன், ஊரணங்குடி ஊராட்சி தலைவர் ரோஸ் இளமாறன் லூயிஸ், உப்பூர் அமிர்தாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் அன்புமலர் பாண்டியன், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். துப்புரவு பணிகளை கடலூர் ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் திருவாடானை சரக பொறுப்பாளர் பாண்டியன், கோவில் விசாரணைதாரர் தேவதாஸ், சிவாச்சாரியார் சேகர் குழுவினர்கள், கோவில் பணியாளர்கள் செய்தனர்.


Next Story