பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு:5 கடைகளுக்கு அபராதம்

தேனி அருகே பூதிப்புரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் பேரூராட்சி அலுவலர்கள் பூதிப்புரத்தில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை செய்தனர். 8 கடைகளில் சோதனை நடத்தினர். அதில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1,300 அபராதம் விதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





