தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்


தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
x

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்துள்ளார். கூட்டத்தில் 385 சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்கள் மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குனர்கள் பங்கேற்று உள்ளனர்.

இதில் எதிர்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை பிரச்சனைகள் குறித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. கூட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெறும். குறிப்பாக அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்படும் டெங்கு மலேரியா எச்1என்1 உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தமிழக முதலமைச்சர் சட்டசபையில் 78 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை அறிவித்தார். இந்த மையங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைவதற்கான இடம் தேர்வு குறித்த அடிப்படை தகவல்களும் இந்த கூட்டத்தில் பகிரப்படும். அத்துடன் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சுகாதாரப் பணிகளுக்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் புதிய 5 மருந்து கிடங்குகள் கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. 4307 காலி பணியிடங்கள் என கண்டறியப்பட்டு செவிலியர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தற்போது 1021 பேருக்கு கலந்தாய்வு நடத்தி உள்ளோம். இரண்டே மாதாத்தில் காலியான உள்ள செவிலியர்கள் பணி நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story