வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி


வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:57 PM GMT)

வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

புதுக்கோட்டை

திருவரங்குளம் அருகே உள்ள பூவரசகுடி ஊராட்சியை சேர்ந்த அழகம்பாள்புரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் உள்பட 3 பேரை வெறிநாய் கடித்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை கடித்தது. இதையடுத்து, வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும், கால்நடை மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு சிகிச்சை அளித்தனர்.


Next Story