நாமக்கல் மாவட்டத்தில் நாளை 35-வது கொரோனா தடுப்பூசி முகாம்


நாமக்கல் மாவட்டத்தில் நாளை  35-வது கொரோனா தடுப்பூசி முகாம்
x

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 35-வது கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 35-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் என மொத்தம் 1,263 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story