வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா


வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா
x

வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். உச்ச நிகழ்ச்சியாக வைகாசி பெருந்திருவிழா நடைபெறும். இந்தாண்டு வைகாசி பெருந்திருவிழா இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இ்ந்த திருவிழா வருகிற 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் தினமும் பக்தி இன்னிசை. பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜவகர், தக்கார் முத்துராஜா, இணை ஆணையாளர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story