அம்மன் கோவில்களில் வைகாசி திருவிழா


அம்மன் கோவில்களில் வைகாசி திருவிழா
x

அம்மன் கோவில்களில் வைகாசி திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் துர்க்கை அம்மன், காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. விழாவைெயாட்டி கரகம் எடுத்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் வளாகத்தில் வைத்தனர். பின்னர் கயிறுகுத்து திருவிழாவினை முன்னிட்டு முடி கணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதையடுத்து கரகம் கரைக்கும் நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் துர்க்கை அம்மன், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் நான்கு ரத வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். விஜயரங்காபுரம் ஊராட்சியை சேர்ந்த துரைச்சாமிபுரத்தில் ராஜகாளியம்மன் கோவில், மீனாட்சிபுரத்தில் மகாகாளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவினை முன்னிட்டு கரகம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.


Next Story