வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா தொடங்கியது


வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா தொடங்கியது
x

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் வைகாசி திருவிழா தொடங்கியது

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். உச்ச நிகழ்ச்சியாக வைகாசி பெருந்திருவிழா நடைபெறும். இந்தாண்டு வைகாசி பெருந்திருவிழா நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜவகர், தக்கார் முத்துராஜா, இணை ஆணையாளர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story