வைகுண்ட ஏகாதசி: வருகிற 19-ந்தேதி திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்


வைகுண்ட ஏகாதசி: வருகிற 19-ந்தேதி திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
x
தினத்தந்தி 7 Dec 2023 1:49 AM GMT (Updated: 7 Dec 2023 2:19 AM GMT)

திருமலையில் பாரம்பரியமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது.

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24-ந்தேதி நள்ளிரவு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 19-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

பாரம்பரியமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது. அதாவது யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையில் நடத்தப்படும். அன்று கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story