விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள்


விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள்
x

விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.

ஈரோடு

விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.

மானியம் பெறலாம்

தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அறுவடைக்குபின்சார் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளைபொருட்களை தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற முடியும். வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவு அரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழைநார் பிரித்தெடுக்கும் கருவி மற்றும் கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

விவசாயிகள்

மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஈரோடு வள்ளிபுரத்தான்பாளையம் கருங்கவுண்டன்பாளையத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், கோபிசெட்டிபாளையம் தெற்கு பார்க் வீதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.


Next Story