வேன்-லாரி மோதல்; 10 பேர் படுகாயம்


வேன்-லாரி மோதல்; 10 பேர் படுகாயம்
x

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வேன்- லாரி மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான காலணிகளை உற்பத்தி செய்திடும் தொழிற்சாலை உள்ளது. நேற்று மாலை தொழிற்சாலையில் வேலை முடிந்து பெண் தொழிலாளர்கள் 15 பேர் வேன் ஒன்றில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சாலை திருப்பத்தில் வந்த போது, வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த அமுதா (வயது 35), விஜயகுமாரி (38), சித்ரா (35), நளினி (36), அனிதா (26), சிந்து (21) ஆகியோர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வேன் டிரைவரான மகேஷ் (26), பாப்பு (21), ஆர்த்தி (21) மற்றும் சிவரஞ்சினி (26) ஆகியோர் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story