வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x

ஆலங்குளம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் வாலிபர் பலியானார்.

தென்காசி

ஆலங்குளம்:

தூத்துக்குடி புஷ்பா நகரை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ஜேம்ஸ் பால் பிரவீன் (வயது 27). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது நண்பரான தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த கிநோவின் வலன்ராஜ் (23) ஆகிய இருவரும் தூத்துக்குடியில் இருந்து குற்றாலத்திற்கு குளிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அருவிகளில் குளித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார்கள்.

ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி ஒரு வேன் வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜேம்ஸ் பால் பிரவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். கிநோவின் வலன்ராஜ் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான ஜேம்ஸ் பால் பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் தங்கராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story