கோவில்களில் வரலட்சுமி விரத பூஜை


கோவில்களில் வரலட்சுமி விரத பூஜை
x

கோவில்களில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது.

அரியலூர்

அரியலூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் தங்கள் கணவர் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வேண்டி நோன்பிருந்த பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பூஜையில் படைக்கப்பட்ட பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை, சுமங்கலிகளுக்கு தானமாக கொடுத்து ஆசி பெற்றனர். வரலட்சுமி விரதத்தில் ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்று லட்சுமி தேவிக்கு பூஜைகள் செய்து, தங்களது விரதத்தை நிறைவேற்றினர்.


Related Tags :
Next Story