வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x

அத்திப்பாக்கம் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை தாங்கினார். அத்திப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் ப.கருணாகரன் முன்னிலை வகித்தார். மருந்தாளுனர் வி.ரமேஷ்பாபு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப பேசினார். வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன், வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தரணீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் பொது மருத்துவம், குழந்தை நலம், பல் மருத்துவம், கண் பரிசோதனை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொடர்பாக 1050 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் 75 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 250 பேருக்கு மக்களை தேடி மருத்துவப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

இதில் வந்தவாசி நகர செயலாளர் தயாளன், மாணவர் அணி கிஷோர்குமார், மதன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சீதாபதி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story