வேதியரேந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்


வேதியரேந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 6:46 PM GMT)

வேதியரேந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் 27-ந் தேதி நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கலைஞரின் நுாற்றாண்டு விழாவையொட்டி மானாமதுரை வட்டம், வேதியரேந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, சி.எல்.பி. அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

மேலும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை பின்பற்றும் சிறந்த 3 விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும். கிடேரி கன்று பேரணி நடத்தி, சிறந்த 3 கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். தாது உப்புக்கலவைகள், தீவன மரக்கன்றுகள் மற்றும் தீவன விதைகள் ஆகியவை கால்நடை வளர்ப்போருக்கு வினியோகிக்கப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இந்த முகாமிற்கு அழைத்து சென்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story