வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாள் அனுசரிப்பு


வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாள் அனுசரிப்பு
x

சேலம் பூலாவரியில் வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அமைதி ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் பூலாவரியில் வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அமைதி ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாள்

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அவரது சொந்த ஊரான பூலாவரியில் அனுரிசரிக்கப்பட்டது.

இதையொட்டி அமைதி ஊர்வலம் பூலாவரி கிளை தி.மு.க. அலுவலகத்தில் தொடங்கி, அவரது நினைவு இடத்தில் முடிவடைந்தது. இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

அஞ்சலி

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வீரபாண்டி ஆ.ராஜா மனைவி சாந்தி ராஜா, மகள்கள் தலைமை பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் வீரபாண்டி மலர்விழி ராஜா, கிருத்திகா ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி ஆ.பிரபு, மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோபால், தமிழ்செல்வன், குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், மாணிக்கம், மணி, ராஜேஷ், ரவிச்சந்திரன், சித்தார்த்தன், பாலமுருகன், மூர்த்தி, சிவராமன், செழியன், மருதமுத்து, அழகுவேல், ராஜா, நகர செயலாளர்கள் பாலு, வேல்முருகன், முருக பிரகாஷ், மண்டல குழு தலைவர்கள் கலையமுதன், உமாராணி, அசோகன், இடங்கணசாலை நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன் மற்றும் பாண்டிதுரை, சுப்பிரமணி, அருணாசலம், கருணாநிதி, குணசேகரன், பன்னீர் செல்வம், சந்திரமோகன், ரேகா பிரியதர்ஷினி, குபேந்திரன், சங்கர், கோபால், மனோகரன், முத்து லிங்கம், புல்லட் நாகராஜன், குகை ரமேஷ், வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி பேரார்சியர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story