வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம்


வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம்
x

அறந்தாங்கியில் 2-வது நாளாக வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

வீரமாகாளி அம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 14-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம் 2 நாட்கள் நடைபெறும்.

தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் நாள் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் வீரமாகாளி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் ேதரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை பக்தர்கள் பெரிய கடை வீதி, எம்.ஜி.ஆர். சிலை வழியாக இழுத்து வந்த ராஜேந்திர சோழீஸ்வரர் அன்னபூரணி அம்பாள் கோவில் எதிரே நிறுத்தினர்.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3.30 மணிக்கு அன்னபூரணி அம்பாள் கோவிலில் நிறுத்தியிருந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஆஸ்பத்திரி ரோடு, பெரிய பள்ளிவாசல் வழியாக வந்து கோவில் நிலையை வந்தடைந்தது.

அப்போது பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். முஸ்லிம்கள் சார்பில், பக்தர்களுக்கு பழ ஜூஸ் மற்றும் சா்பத் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story