வேளாங்கண்ணி ஆலய திருவிழா பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்


வேளாங்கண்ணி ஆலய திருவிழா பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
x

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய பொன் விழா ஆண்டு திருவிழாவையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை,

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டு பெருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

29-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கொடி பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு 6-வது அவென்யூ 3-வது பிரதான சாலை, 7-வது அவென்யூ வழியாக சென்று திரும்பி மீண்டும் ஆலயத்துக்கு வருகிறது. செப்டம்பர் 1-ந் தேதி மாலை 4.30 மணிக்கு இளைஞர் ஊர்வலமும், 2-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தேர்பவனியும், 3-ந் தேதி இரவு 7.30 மணியளவில் நற்கருணை ஊர்வலமும் நடக்கிறது. 7-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு 6-வது அவென்யூ, 4-வது பிரதான சாலை, 2, 3 மற்றும் 7-வது அவென்யூ வழியாக சென்று திரும்பி ஆலயத்துக்கு வந்தடையும்.

எனவே இந்த திருவிழாவையொட்டி பெசன்ட்நகர் பகுதியில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.

* அடையாறு திரு.வி.க. பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். மக்கள் கூட்டம் அதிகமாகவும், வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாகவும் இருக்கும் போது 3-வது அவென்யூ, 2-வது அவென்யூ நோக்கி வரும் வாகனங்கள் டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் (எம்.எல். பார்க்) திரும்பி, எல்.பி. சாலை, எம்.ஜி.சாலை வழியாக செல்ல வேண்டும்.

* எம்.ஜி. சாலையில் அதிகமாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு நெருக்கடியாக இருக்கும் போது, பெசன்ட் நகர் 1-வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் பஸ் நிலையம், 2-வது அவென்யூ வழியாக திருப்பி விடப்படும்.

* திருவிழாவுக்கு வருகிறவர்கள் தங்களது வாகனங்களை ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பெசன்ட் நகர் 2-வது பிரதான சாலை, பெசன்ட் நகர் 4-வது அவென்யூ, பெசன்ட் நகர் 17-வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் நிறுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story