ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம், அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அனைத்தும் கோவிலில் உள்ள ரெங்க விலாஸ் மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் மங்கல பொருட்கள் இருந்த ஒரு தட்டை யானை மீது வைத்தும் மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து வஸ்திர மரியாதைகளுடன் நேற்று இரவு புறப்பட்டு திருப்பதிக்கு சென்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியன்று திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story