கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:47 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் விஜயஸ்ரீ தலைமை தாங்கினார். சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவர் சரோஜா முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, செயற்கை முறையில் கருவூட்டல், குடல் புண் நீக்குதல், தடுப்பூசி போடுதல், சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை கால்நடை மருத்துவர்கள் அளித்தனர். சிறந்த கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கால்நடை உதவியாளர் ராமலட்சுமி, ஊராட்சி செயலாளர் செந்தூர்பாண்டி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.



Next Story