சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் விஜயதசமி வழிபாடு


சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் விஜயதசமி வழிபாடு
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் விஜயதசமி வழிபாடு

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு அருகே உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று, பின்னர் வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story