இறால் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை


இறால் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகை
x

கும்மிடிப்பூண்டி அருகே இறால் தொழிற்சாலையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ள கொண்டாமாநல்லூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து அரசு விதிகளை முறையாக கடைபிடிக்காமல் அருகே உள்ள மாந்தோட்டம் மற்றும் வனப்பகுதிகளில் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கிராம மக்கள், உடல் அரிப்பு மற்றும் கண் எரிச்சலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வரும் மேற்கண்ட தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கொண்டமாநல்லூர் கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story