கிராம மக்கள் சாலை மறியல்

சின்னசேலம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே வினைதீர்த்தாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே பாலத்தை அகலப்படுத்துவதோடு, உயரமாக அமைக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரான சரவணன் தலைமையில் அங்குள்ள பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறி சரவணன், சண்முகம், குமார் உள்பட 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





