குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 24 Jun 2023 7:19 PM GMT (Updated: 25 Jun 2023 10:56 AM GMT)

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூர் கீழ சேத்தி கிராமத்தில் மோட்டார் பழுதானதால் கடந்த 2 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம்-காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநீலக்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story