விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதல் அமைச்சர் அறிவிப்பு


விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்..! முதல் அமைச்சர்  அறிவிப்பு
x

நிவாரண நிதியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா க/பெ. அருணாச்சலம் (வயது 24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.


Next Story