விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்


விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:30 AM IST (Updated: 7 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலம் அருகில் தென்காசி மாவட்ட விசுவ இந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் முத்துமாரியப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். அரியானா மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வன்னியராஜன், செயலாளர் முருகன்தளவாய், சபரிமணி, முன்னாள் மாநில தலைவர் பெரியகுழைகாதர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.

மாநில இணைச் செயலாளர் காளியப்பன், பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் மாரியப்பன், நகர தலைவர் வேம்புராஜ், நகர பார்வையாளர் வாசன், அமைப்புசாரா பிரிவு காளி, இளைஞர் அணி தலைவர் வீரசிவா, ஸ்ரீராம், கார்த்திக், அருண் சங்கர், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முருகன், நகர தலைவர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சரவணன் கூறினார்.

1 More update

Next Story