சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் தடை

வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வருகிற 9ந்தேதி முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





