ஓணம் விடுமுறை நாட்களில்விவேகானந்தர் மண்டபத்தை 31,500 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்


ஓணம் விடுமுறை நாட்களில்விவேகானந்தர் மண்டபத்தை  31,500 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
x

ஓணம் விடுமுறை நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 31,500 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

ஓணம் விடுமுறை நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 31,500 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.

விவேகானந்தர் மண்டபம்

உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பணிகள் கூட்டம் அலைமோதும்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் பார்த்து விட்டு திரும்புவர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகள் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி இயக்கப்படுகிறது.

31,500 பயணிகள் பார்வையிட்டனர்

இந்தநிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதன்படி இந்த நாட்களில் 31 ஆயிரத்து 528 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.

தற்போது, திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி தொடங்கியுள்ளதால், அங்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story