கைப்பந்து போட்டி: தமிழ்நாடு அணியில் விளையாட கரூர் மாணவர் தேர்வு

தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாட கரூர் மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு ஹேண்பால் சங்கம் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அணிக்கான கைப்பந்து வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவர் நவீன்குமார் தமிழ்நாடு கைப்பந்து அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளார். இதையடுத்து நவீன்குமாரை கல்லூரி, பேராசிரியர்கள், சக மாணவ- மாணவிகள் பாராட்டினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





