மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை   நாளை  நடக்கிறது.
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது.

நகராட்சி வார்டு

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் 35 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது 19-வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விண்ணப்பித்திருந்த அன்னதாட்சி என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதனால் அந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் காலியாக உள்ள அந்த வார்டுக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடந்தது. அங்கு பதிவான வாக்குகளின் வாக்குப்பெட்டிகள் நகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை வாக்கு எண்ணிக்கை

இந்த வாக்குகள் நகராட்சி அலுவலகத்தில்நாளை(செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இதே போல கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 16-வது ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், புத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடக்கிறது. மூவலூர் ஊராட்சியில் நடந்த வார்டு உறுப்பினர் பதவிக்காக பதிவான வாக்குகள் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், குத்தாலம் ஒன்றியம் பெருஞ்சேரி ஊராட்சியில் நடந்த வார்டு உறுப்பினர் பதவிக்காக பதிவான வாக்குகள் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், செம்பனார்கோவில் ஒன்றியம் கீழப்பெரும்பள்ளம், கஞ்சாநகரம் மற்றும் காட்டுச்சேரி ஆகிய ஊராட்சிகளில் உறுப்பினர் பதவிக்காக பதிவான வாக்குகள் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் எண்ணப்படுகின்றன.


Next Story