வார்டு பகுதி சபை கூட்டம்


வார்டு பகுதி சபை கூட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2023 11:00 PM GMT (Updated: 15 Sep 2023 11:01 PM GMT)

கம்பம் நகராட்சி 3-வது வார்டு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

தேனி

கம்பம் நகராட்சி 3-வது வார்டு பகுதி சபை கூட்டம் சங்கிலி நகர் தெருவில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கழிவு நீர் தேங்குதல், குப்பை அகற்றாமல் இருப்பது, தெருவிளக்கு அமைத்தல், பஸ் நிறுத்தம் மற்றும் நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பெண்கள், தலைவரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய தலைவர் சங்கிலி நருக்கு தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும் என்றார். கூட்டத்தில் ஆணையர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், பகுதிக்குழு உறுப்பினர்கள் கருத்தக்கண்ணன், சந்திரன், பாண்டியராஜ் முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story