வட்டமலைக்கரை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


வட்டமலைக்கரை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x

வட்டமலைக்கரை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

திருப்பூர்

வெள்ளகோவில்

வட்டமலைக்கரை ஓடை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 6 ஆயிரத்து 43 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வட்டமலைக்கரை ஓடை அணை

‌ ‌ திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை 600 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 43 ஏக்கர் பாசன பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணைக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

தண்ணீர் திறப்பு

அதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் முறையாக வட்டமலைக்கரை ஓடை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு 2-ம்முறையாக இந்த ஆண்டு மே மாதம் திறந்து விடப்பட்டது. தற்போது 3-வது முறையாக விவசாய பாசனத்திற்கு மற்றும் குடிநீருக்காக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.


Next Story