ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்


ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
x

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சென்னை,

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சென்னையில் நாளை போராட்டம் நடத்த உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒவ்வொரு சங்கத்துக்கும் போன் செய்து அழைத்திருந்தோம். அவர்களும் என்னிடம் காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருவதாக நேற்று தெரிவித்து இருந்தனர். நான் இன்று காலை 8 மணியில் இருந்து எனது வீட்டில் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. பரவாயில்லை. அவர்களுக்குள்ளே ஒரு சில முரண்பாடுகள் இருக்கிறது.

அப்போதும் கூட நான் எல்லோரும் பேசி ஒருமித்த கருத்தோடு என்னை பார்க்க வாருங்கள் என்றேன். உங்களுக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருந்தேன். அவர்களுக்காக எனது இல்லத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். எந்த நேரத்திலும் ஆசிரியர்கள் வந்து தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம். பேச்சுவார்த்தைக்காக அவர்களை மீண்டும் அழைக்கிறேன்.

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட், ஜே.இ.இ ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story