தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆளவேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு


தமிழ்நாட்டை நிரந்தரமாக  திமுக ஆளவேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்  பேச்சு
x

தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) ராமநாதபுரத்தில் நடைபெற்றது. . தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது,

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை திமுக அரசு செய்து கொடுத்துள்ளது. திமுக அரசின் திட்டங்களால் பின்தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறியுள்ளது, ராமநாதபுரத்தில் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டது. தண்ணியில்லா காடாக இருந்த ராமநாதபுரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தோம்.

ராமநாதசாமி கோவிலில் தங்கத் தேரை ஓட வைத்ததும் திமுக ஆட்சிதான். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தது திமுக அரசு. 5,000 சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது திமுக அரசு. தமிழ்நாட்டை திமுக தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்ற முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.


Next Story