களை கட்டிய மீன்பிடி திருவிழா


களை கட்டிய மீன்பிடி திருவிழா
x

கொட்டாம்பட்டி அருகே மீன்பிடி திருவிழா களை கட்டியது.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, குமுட்ராம்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்கு சொந்தமான கொட்டாய்குளம் கண்மாயில் நேற்று பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் நீண்ட ஆண்டுக்கு பிறகு கண்மாய்கள் நிரம்பின.தற்போது கோடை காலம் என்பதாலும் கண்மாய்களில் நீர் வற்றியதை தொடர்ந்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் காலை முதலே கண்மாய் கரையில் காத்திருந்தனர்.இதனையடுத்து 3 கிராம முக்கியஸ்தர்கள் அங்குள்ள பொய் சொல்லா மெய் அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விட்டு வெள்ளை வீசி அனுமதி அளித்த உடன் கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கண்மாய்க்குள் இறங்கி மீன்களைப் பிடிக்க தொடங்கினர். பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, கெழுத்தி, விரால், ஆப்பிரிக்க கெழுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்யாமல் அவரவர் வீட்டில் சமைத்து உண்ணுவது வழக்கமாக உள்ளது. களை கட்டிய மீன்பிடி திருவிழாவை ஏராளமானோர் வேடிக்கையும் பார்த்தனர்.


Related Tags :
Next Story