சென்னை-நெல்லை இடையிலான வாராந்திர வந்தே பாரத் ரெயில் சேவை, நாகர்கோவில் வரை நீட்டிப்பு


சென்னை-நெல்லை இடையிலான வாராந்திர வந்தே பாரத் ரெயில் சேவை, நாகர்கோவில் வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2023 11:14 AM GMT (Updated: 25 Dec 2023 11:30 AM GMT)

சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

சென்னை,

சென்னை எழும்பூர்- நெல்லை இடையே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த ரெயில் சேவையானது நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story