மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

கலசபாக்கம் அருகே மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் தாலுகாக்குட்பட்ட கிடாம்பாளையம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம நடந்தது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்

சிறப்பு விருந்தினராக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டு 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story