ஆற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன?


ஆற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன?
x

அம்பையில் ஆற்றில் மூழ்கிய தொழிலாளி கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி

அம்பை:

தூத்துக்குடி விஸ்வபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சுரேஷ் (வயது 23). பெயிண்டிங் தொழிலாளியான இவர் தனது சக தொழிலாளர்களுடன் நேற்று அம்பை பகுதிக்கு சுற்றுலா வந்தார். அங்கு மதியம் 12 மணியளவில் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதில் மாயமானார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை தேடியும் சுரேஷ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் இன்று காலை தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

1 More update

Next Story