தாயார் வீட்டிற்குச்சென்ற பெண்ணுக்கு அடி-உதை


தாயார் வீட்டிற்குச்சென்ற பெண்ணுக்கு அடி-உதை
x

தாயார் வீட்டிற்குச்சென்ற பெண்ணுக்கு அடி-உதை

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள சொரியன் கிணத்துபாளையத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி சோபியா (வயது 22). இவர் தனது தாய் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று சோபியா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது கணவர் குமரேசன், மனைவி சோபியாவை பார்த்து தகாத வார்த்தைகள் திட்டியும் அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோபியா கொடுத்த புகாரின் பேரில் குமரேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

----


Related Tags :
Next Story