அரசு மருத்துவ கல்லூரியில் வெள்ளை அங்கி வழங்கும் விழா கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார்


அரசு மருத்துவ கல்லூரியில் வெள்ளை அங்கி வழங்கும் விழா கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார்
x

அரசு மருத்துவ கல்லூரியில் வெள்ளை அங்கி வழங்கும் விழாவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றார்.

ஈரோடு

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். டாக்டர் மோகனசவுந்தரம் வரவேற்றார். ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விழாவில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் அவர் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து மாணவ- மாணவிகள் டாக்டர்களின் அடையாளமான வெள்ளை அங்கியை அணிந்தனர். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் சுப்புலட்சுமி உறுதிமொழி வாசிக்க, மாணவ- மாணவிகள் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றனர். விழாவில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் செந்தில் செங்கோடன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story