விவசாய நிலத்துக்குள் புகுந்து காட்டெருமைகள் அட்டகாசம்

விவசாய நிலத்துக்குள் புகுந்து காட்டெருமைகள் அட்டகாசம் செய்தன.
கெங்கவல்லி:
கெங்கவல்லி பகுதியில் விவசாய நிலத்துக்குள் காட்டெருமைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கிறது என்று வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். கெங்கவல்லி வனத்துறை அதிகாரிகள் ஆணையம்பட்டி பகுதியில் விவசாய தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகளை பின்தொடர்ந்தனர். 4 காட்டெருமைகள் சுவேதா நதிக்கரையில் சுற்றி திரிந்தன. பின்னர் அந்த காட்டெருமைகளை பச்சமலை பகுதிக்கு விரட்டி விட்டனர். இருந்தாலும் தொடர்ந்து காட்டெருமைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து விடாமல் இருக்க வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





