முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா?


முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா?
x

முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா கீழப்புலியூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கே. புதூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. அதேபோல் மாத இறுதியில் செல்லும் 20-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு போதிய இருப்பு இன்றி அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுவது இல்லை. மேலும் அடுத்த மாதம் வாங்காத பொருட்களை மீண்டும் கேட்டால் வழங்கப்படுவதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story