குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகள் சீரமைக்கப்படுமா?


குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகள் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 13 Aug 2023 12:30 AM IST (Updated: 13 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


பாதுகாப்பு இல்லை


பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதிகளில் பெய்யும் மழை மூலம் நீர்வரத்து உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் இல்லாததால் கடந்த ஜனவரி மாதம் நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. அதன்பிறகு கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் திறக்கப்பட்டது.


இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் தடுப்புகள் சேதமடைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.


இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-


தடுப்பு கம்பிகளை சீரமைக்க...


குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக நீர்வீழ்ச்சிக்கு வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் போது தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. ஆனால் அதன்பிறகு தடுப்பு கம்பிகளை சீரமைக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக தண்ணீர் இல்லாமல் இருந்த போது கம்பியை சீரமைத்து இருக்கலாம். எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு கம்பிகள் மீண்டும் வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


கான்கீரிட் அமைக்க திட்டம்


இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், குரங்கு நீர்வீழ்ச்சியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தன.


மழை அதிகமாக பெய்த போது வெள்ளம் காரணமாக நீரில் அடித்து செல்லப்பட்டு, சேதமானது. தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் தடுப்பு கம்பிகளை சீரமைக்க முடியவில்லை.


நீர்வரத்து குறைந்ததும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.மேலும் கான்கீரிட் அமைத்து வலுவான வகையில் தடுப்பு கம்பிகளை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.


1 More update

Next Story