சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
x

கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொட்டாரக்குடியில் இருந்து நல்லுக்குடி வரை செல்லும் திருவாரூர் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலை வழியாக கொட்டாரக்குடி, நல்லுக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story