கஞ்சா விற்ற பெண் கைது


கஞ்சா விற்ற பெண் கைது
x

போடியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்

தேனி

போடி நகர் போலீசார் இன்று காலை ரோந்து சென்றனர். அப்போது அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கோடாங்கிபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மனைவி ஜெயலட்சுமி (வயது 55) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story